யாருக்காய் வாழ்கிறாய் நீ?

யாருக்காய் வாழ்கிறாய் நீ?
இந்த வையகம் தனிலே நீ
வாழ்ந்திடும் நாட்களெல்லாம்
யாருக்காய் வாழ்கிறாய் நீ?

1. மாமிச ஆசையில் சிக்கலுண்டு
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே
சிற்றின்பப் பிரியராய் வாழ்வாருண்டு
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே - இவர்
நாளெல்லாம் தீழ்ப்பான நோக்கம் கொண்டோர் (2)
இவர் வாழ்வெல்லாம் பாவமும் சாபமுமே

2. பணம் பணம் என்றிடும் பலருமுண்டு
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே
மனமெல்லாம் செல்வத்தைச் சேர்த்திடவே
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே - இவர்
மூச்செல்லாம் ஆஸ்திக்காய் அலறி நிற்கும் (2)
ஆனால் வாழ்வெல்லாம் வறட்சியும் தாழ்ச்சியுமே

3. கொள்கைக்காய் வாழ்பவர் பலருமுண்டு
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே
வீண் பெருமைக்கு விலையாகிப் போனார் உண்டு
இந்தப் புவியினிலே இந்தப் புவியினிலே - இவர்
நாளெல்லாம் விரிவில்லா மனதுடையோர் (2)
இவர் வாழ்வெல்லாம் சாதனை இழந்து நிற்போர்

4. உடைபட்ட அப்பமாய் திகழ்வாருண்டு
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே
கரைந்திடும் உப்பாய் நிற்பாருண்டு
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே - இவர்
நாளெல்லாம் இயேசுவுக்காய் மறைந்து நிற்பார் (2)
வெறும் கூப்பிடும் சத்தமாய் பணிபுரிவார்


Click here to listen this song!